யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
யாழ். சாவகச்சேரி புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கொழும்பிலிருந்து யாழ். வல்வெட்டித்துறைக்கு சென்ற வேன் ஒன்று மதில் ஒன்றில் மோதி இன்று (16) அதிகாலை 4 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Islah MovementIslah News © 2013. All Rights Reserved. Powered by Islah Media
Desiged By. Aslam.M
Top