
தேர்தல் வன்முறைகள் அல்லது சட்டமீறல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை S.M.S. எனப்படும் குறுந்தகவல் ஊடாகவும் தெரிவிப்பதற்கான திட்டமொன்றை தேர்தல்கள் செயலகம் இன்று (14) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கமைய 15 ஆம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த சேவையின் ஊடாக முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை EC இடைவெளி சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் பெயர் அதன் பின்னர் மற்றுமொரு இடைவெளிவிட்டு முறைப்பாட்டை குறிப்பிட்டு 23 43 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment